நாட்டின் இளம் பிரதமர்; தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமரின் மகளை தேர்வு செய்ய முடிவு

Post Views: 54 வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 16) தாய்லாந்தில் நடைபெற்ற பாராளுமன்ற வாக்கெடுப்பில், பியூ தாய் கட்சியின் பொதுச்செயலாளர் சோராவோங் தியெந்தோங்கால் தாய்லாந்தின் பிரதம மந்திரி பதவிக்கு பெடோங்டர்ன் ஷினவத்ரா பரிந்துரைக்கப்பட்டார்.சில நாட்களுக்கு முன்னர் நெறிமுறை மீறல் தொடர்பாக அரசியலமைப்பு நீதிமன்றத்தின் உத்தரவின் மூலம் முன்னாள் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இந்த வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ளது. 37 வயதான பேடோங்டர்ன் ஷினவத்ரா பியூ தாய் கட்சியின் தலைவராக உள்ளார். அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இல்லை.அந்நாட்டு சட்டப்படி … Read more

குரங்கு அம்மை தொற்று பரவல்… சர்வதேச அவசர நிலையை அறிவித்த உலக சுகாதார அமைப்பு!

Post Views: 52 எம்.பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை தொற்று உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதால், உலக சுகாதார நிறுவனம் சர்வதேச அவசர நிலையை பிறப்பித்துள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதாகவும், 517 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது.13 நாடுகளில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்தாண்டை ஒப்பிடுகையில் 160 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது. இந்நிலையில், குரங்கு … Read more

போர்நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு இடையே… காசாவை தாக்கிய இஸ்ரேல்; 19 பேர் பலி

Post Views: 44 காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர். 23 லட்சத்திற்கும் கூடுதலான மக்கள் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.காசா மற்றும் இஸ்ரேல் இடையே நடந்து வரும் இந்த தீவிர மோதலின் ஒரு பகுதியாக, நேற்றிரவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பெண், 6 குழந்தைகள் உள்பட 19 பேர் பலியாகி உள்ளனர் என தெரிய வந்துள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கன் காசாவுக்கு … Read more

அமெரிக்காவில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவன்: ரூ.5.8 கோடி நிதி திரட்டிய தன்னார்வலர்கள்..!

Post Views: 62 அமெரிக்காவில், மகளை கல்லூரியில் விட சென்ற போது ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தம்பதி உயிரிழந்தனர். அவர்களின் மகன் மட்டும், தனிமையில் கதறி வருகிறார். அவருக்கு உதவும் வகையில் தன்னார்வலர்கள் இணைந்து இணையதளம் மூலம் 7,00,000 அமெரிக்க டாலர்கள்(ரூ.5.87 கோடி இந்திய மதிப்பில்) நிதி தரட்டி உள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் லியாண்டர் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அர்விந்த் மணி(45), பிரதீபா(40), ஆண்ட்ரில் (17) . ஆதிர்யான்(14) வசித்துவந்தனர். கடந்த … Read more

ஹய்யா ஜாலி., ஐக்கிய அரபு எமிரேட்சில் இனி ‘ ஜி பே ‘ பண்ணலாமே !

Post Views: 431 பொதுவாக ஒரு நாட்டவர்கள் மற்றொறு நாட்டுக்கு செல்லும் போது அந்தந்த நாட்டின் கரன்சியை மாற்றி எடுத்து செல்வோம். இதன் மூலம் நாம் பர்சேஸ் செய்வது வழக்கம். தற்போது நவீன டிஜிட்டல் தொழிநுட்பம் உதவியுடன் Unified Payments Interface (UPI) மூலம் போன் வழியாக ஸ்கேன் செய்து பணத்தை அனுப்பி வருகிறோம். எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணத்தை அனுப்பிவிட முடிகிறது. இது இந்தியாவில் உள்ளவர்கள் உள்நாட்டில் மட்டுமே பண பரிவர்த்தணை செய்ய முடியும். வெளிநாடுகளில் … Read more

சீக்கிரம் தருகிறோம்., வேகமா வாங்க., இந்தியர்களுக்கு ஜெர்மனி அழைப்பு..!

Post Views: 52 பெர்லின்: பொருளாதார ரீதியில் முன்னேற்ற தடைகளை தவிர்க்க இந்தியாவில் இருந்து வரும் பணி நிமித்த விசா விண்ணப்பத்தை விரைந்து ஏற்று உரிய ஆணை வழங்கிடும் காலத்தை வெகுவாக குறைக்க ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியை பொறுத்தவரை இந்தியர்கள் பணி நிமித்த விசாவுக்கு 9 மாத காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இது இந்தியர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக ஜெர்மனியில் பல்வேறு இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனங்களில் திறன் சார்ந்த … Read more

ஒருபுறம் நிலநடுக்கம்… மறுபுறம் எரிமலை: இயற்கை பேரிடரால் அலறும் ரஷ்ய மக்கள்..!

Post Views: 58 நிலநடுக்கம்ரஷ்யாவின் கிழக்கு கடல் பகுதியான கம்சட்காவில், இந்திய நேரப்படி நள்ளிரவு 12.40 மணிக்கு திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானது. இதனால், கட்டிடங்கள் குலுங்கியதால், அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். ஒரு சில பகுதிகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த நிலநடுக்கமானது கம்சட்காவில் இருந்து 90 கி.மீ., தொலைவில் பூமிக்கு அடியில் 50 கி.மீ., ஆழத்தில் உணரப்பட்டதாக அமெரிக்க … Read more

ஈரானில் கடும் வெப்ப அலை வீசுவதால் அரசு அலுவலகங்கள் மூடல்..!

Post Views: 65 காலநிலை மாற்றம் என்பது தற்போது உலக நாடுகள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அந்தவகையில் மேற்கு ஆசிய நாடான ஈரானில் கடும் வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக தலைநகர் டெஹ்ரானில் 107 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தியது. இதனால் 200-க்கும் மேற்பட்டோர் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதே சமயம் வெப்ப அலை காரணமாக அங்கு மின்சார நுகர்வும் பல மடங்கு அதிகரித்தது. எனவே மின்சார ஆற்றலை சேமிக்க அங்குள்ள வங்கி, … Read more

பாகிஸ்தானில் மலைவாழ் மக்கள் மோதல்; 36 பேர் பலி; 160 பேர் காயம்!

Post Views: 52 கராச்சி: பாகிஸ்தானில் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதில் 36 பேர் கொல்லப்பட்டனர். 160 பேர் காயமுற்றனர். உப்பர்குராம் மாவட்டம் போசேரா என்ற கிராமத்தில் மலைவாழ் மக்கள் கடந்த 5 நாட்களாக மோதலில் ஈடுபட்டுள்ளனர். நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக எழுந்த பிரச்னையில் கலவரம் வெடித்துள்ளது.

சீனாவில் நிலச்சரிவு; 11 பேர் பலி..!

Post Views: 18,732 சீனாவில் கயாமி புயலால் கனமழை பெய்த நிலையில், அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகினர்.நம் அண்டை நாடான சீனாவில் கயாமி புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. ஹுனான் மாகாணத்தின் யூலின் கிராமத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு, அங்கிருந்த குடியிருப்பு பகுதிகளை மூடியது.தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்டோரை மீட்டு, நிவாரண முகாம்களுக்கு … Read more