பண மோசடி செய்த குற்றத்திற்காக சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவரது கணவருக்கு 12 ஆண்டுகள் சிறை மற்றும் 50மில்லியன் அபராதம்.

சவூதி அரேபியாவில் சுமார் 63 (SR63,045,550) மில்லியன் பண மோசடியில் ஈடுபட்ட சவூதி அரேபியாவை சார்ந்த பெண் மற்றும் அவருக்கு துணையாக இருந்த அவரது கணவர் இருவருக்கும் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பததோடு, 50 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார குற்றங்களை கையாளும் சிறப்பு நீதிமன்றம், வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்ட நிதியின் மதிப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் கணக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நிதி மற்றும் அவர்களது வணிக நிறுவனதில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட SR103322.23 தொகையை … Read more

சவூதி அரேபியாவில் ABSHER மூலம் டிரைவிங் ஸ்கூலில் முன்பதிவு(Appointment ) செய்வது எப்படி?

சவூதி அரேபியாவில் அப்ஷர் மூலம் ட்ரிவிங் ஸ்கூலில் முன்பதிவு செய்வதற்கான முறைகளை தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி குடிமக்கள், ஆண்கள், பெண்கள் உட்பட வெளிநாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் அனைவரும் இந்த முறையில் அப்பாயிண்ட்மெண்ட்டை முன் பதிவு செய்யலாம் என்று விளக்கியுள்ளது. அப்ஷர் மூலம் ஓட்டுநர் பயிற்சிக்கான Appointment முன்பதிவு செய்வது எப்படி? உங்கள் Abhser கணக்கில் உள்நுழைந்து, OTPயைச் சரிபார்க்கவும். முகப்புத் திரையில் இருந்து “அப்பாயிண்ட்மெண்ட்ஸ்” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கக்கூடிய விருப்பங்களிலிருந்து “Traffic” என்பதைக் கிளிக் செய்யவும், அது உங்களை … Read more

UAE: இஸ்லாமிய புத்தாண்டை முன்னிட்டு அமீரகத்தில் தனியார் துறைக்கு அரசு விடுமுறையை அறிவித்துள்ளது

துபாய்: ஹிஜ்ரி ஆண்டு 1444 இஸ்லாமிய புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஜூலை 30, 2022 சனிக்கிழமையை அதிகாரப்பூர்வ ஊதிய விடுமுறையாக மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறைகள் குறித்த அமைச்சரவை தீர்மானத்தை இது நடைமுறைப்படுத்துகிறது.

துபாய்: One Day Flash Sale 90% வரை அதிரடி சிறப்பு தள்ளுபடி
துபாய் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள்
பங்கேற்பு..

துபாயில் வருகிறது ஒரு நாள் Flash Sale பல்வேறு பிராண்டுகளுக்கு 90% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. துபாய் சம்மர் சர்ப்ரைசஸின் (DSS) 25வதுஆண்டு நிறைவைக் கொண்டாடும்வகையில், நாளை ஜூலை 25 திங்கள் அன்று 25 மால்களில் நடக்கும் சிறப்பு விற்பனையில் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகள் பங்கேற்கின்றன. இந்த விற்பனையானது ஃபேஷன் பொருட்கள், வீடு மற்றும் வெளிப்புற அலங்காரக பொருட்கள், வாசனை திரவியங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கும். யூனியன் கோ-ஆப்பரேட்டிவ் பொருட்களுக்கு 90% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, … Read more

தமிழகத்தில் விரைவில் மின் கட்டணம் உயர்வு (முழு விபரம்)

மின்சார வாரிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மாநில மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் 12,647 கோடியாக உயர்ந்துள்ளது எனவும் மேலும் தமிழ்நாட்டில் மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது எனவும், மேலும் மின் கட்டணத்தை உயர்த்தாவிட்டால், கடன் எதுவும் வழங்கக்கூடாது என ஒன்றிய அரசு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது, ஏற்கனவே … Read more

உலக பாஸ்போர்ட் தரவரிசையில் கத்தார் முன்னேறியுள்ளது

ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற உலகளாவிய முதலீட்டு இடம்பெயர்வு ஆலோசனையின் சமீபத்திய தரவரிசையின்படி, கத்தார் பாஸ்போர்ட் மூன்று இடங்கள் முன்னேறி, விசா இல்லாத அல்லது விசா-ஆன்-அரைவல் ஸ்கோர் 99 உடன் உலகில் 57 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2012 இல், கத்தார் 67 வது இடத்தைப் பிடித்தது, இது நாட்டின் முன்னோக்கு சிந்தனைக் கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தை காட்டுகிறது. FIFA உலகக் கோப்பை 2022 நடத்தும் நாடு கத்தார், 2021 இல் 97 மதிப்பெண்களுடன் 60 … Read more

முஸ்லீம் அல்லாதவரை மக்காவிற்கு அழைத்து சென்ற குற்றத்திற்காக சவூதி குடிமகன் கைது.

மக்கா போலீசார் சவுதி அரேபியாவை சார்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர் முஸ்லீம் அல்லாதவருக்கு மக்காவிற்குள் செல்வர்தற்கு உதவிய சவூதி குடிமகன் ஒருவரை அந்நாட்டின் மக்கா காவல்துறை தற்போது கைது செய்துள்ளது. சவுதி அரசின் விதிகளின்படி, முஸ்லிம்கள் அல்லாதோர் புனித மக்கா அல்லது மதீனாவிற்குள் நுழைய அனுமதி இல்லை. இதுகுறித்து மக்கா காவல்துறை அதிகாரி கூறுகையில், சவுதி நாட்டவர் ஒருவர் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவரை முஸ்லிகளுக்கான பிரத்யேக பாதையில் மக்காவிற்குள் அழைத்து வந்தார், சவுதி அரேபியாவின் விதிமுறைகளை மீறிய … Read more

2021ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ்
இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்கு எவ்வளவு கோடி வரவு தெரியுமா..?

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் தங்கள் தாய் நாட்டுக்கு அனுப்பும் பணம் தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்து வரும் இந்தியர்கள், தாய் நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்துக்கு ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புவது வழக்கம். அவ்வாறு2021வது ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மூலம் இந்தியாவுக்குள் சுமார் 87 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.6.9 லட்சம் கோடி வரவாகியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. … Read more

அடுத்த உம்ரா சீசனில் 10 மில்லியனுக்கும் அதிகமான யாத்ரீகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

மக்கா – ஹஜ், உம்ரா மற்றும் வருகை நடவடிக்கைகளுக்கான தேசியக் குழுவின் துணைத் தலைவர் ஹனி அல்-அமிரி, வரும் உம்ரா சீசனில் 10 மில்லியனுக்கும் அதிகமான உம்ரா யாத்ரீகர்கள் எதிர்பார்க்கப்படுவதாக கூறினார், மேலும் இது ஜூலை 1, 1444 அன்று தொடங்கும். வருகின்ற முஹர்ரம் 1 ஆம் தேதி உம்ரா சீசன் தொடங்கும் போது யாத்ரீகர்களுக்கான பல சேவைகள் செயல்படுத்தப்படும் என்று அல்-அமிரி கூறினார். இதில் உம்ரா யாத்ரீகர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு உரிமம் பெற்ற சவுதி நிறுவனங்கள் … Read more

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்..

கடந்த மூன்று ஆண்டுகளில் 392,000 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர், அவர்களில் அதிகபட்சமாக 170,000 பேர் அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர் என்று செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தின் கீழ்சபை அறிவித்தது. கடந்த 2015-2021 ஆண்டுகளில் மட்டும் சுமார் 9.24 லட்சம் பேர் தங்கள் குடியுரிமையை துறங்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: வெளிவிவகார அமைச்சகம் வழங்கிய விவரங்களின்படி, தனிநபர்கள் தங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய குடியுரிமையை துறந்தனர் என்றும், 120 … Read more