இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்து – 15 மாத போரை முடிவுக்குக் கொண்டு வருமா?!

Post Views: 353 இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி, 15 மாதங்களாக போர் நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் … Read more

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல்!

Post Views: 302 இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது. ஜெருசலேம், காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் 117 பணய கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. … Read more

அதிகரிக்கும் பதற்றம்: இஸ்ரேலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா!

Post Views: 409 இஸ்ரேலுக்கு எதிராக ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் போர் தொடுத்து வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக லெபனானிலும் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்து வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு எதிராக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. முன்னதாக ஹிஸ்புல்லாக்களுக்கு … Read more

காசா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் சம்மதித்தால் சண்டையை நிறுத்த தயார்: ஹமாஸ்..!

Post Views: 958 பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துகிறது. இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் … Read more

லெபனானில் மருத்துவமனை அருகே இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 13 பேர் உயிரிழப்பு

Post Views: 207 அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஸ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் காரணமாக லெபனானில் சுமார் 12 லட்சம் மக்கள் … Read more

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்டோர் பலி – லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல்

Post Views: 149 பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடங்கி நாளை மறுநாளுடன் (திங்கட்கிழமை) ஓர் ஆண்டாகிறது. ஈரானின் ஆதரவை பெற்ற ஹமாஸ் அமைப்புக்கு எதிரான இந்த போரில் காசாவில் சுமார் 42 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவை பெற்ற ஆயுத குழுக்கள் ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேலை குறிவைத்து வான்வழியாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் … Read more

லெபனானுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்: கத்தார் அறிவிப்பு

Post Views: 131 ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் எல்லையையொட்டிய இஸ்ரேல் பகுதிகளில் தினந்தோறும் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது. இது அங்கு வசித்து வந்த பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்களை இடம் பெயர செய்தது. இதனால் ஹிஸ்புல்லா அமைப்பை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் முடுக்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாக முன்னெப்போதும் இல்லாத வகையில் லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை … Read more

இஸ்ரேல் தீவிர தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்..!

Post Views: 159 லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது.இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்குதலை தொடங்கி இருப்பதாகவும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதை … Read more

ஈரான் நடத்திய தாக்குதல்|லண்டனில் இருந்து சென்னைக்கு வரவிருந்த விமானம் திருப்பி அனுப்பிவைப்பு

Post Views: 163 ஈரான் தாக்குதல் காரணமாக லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சவுதி அரேபியாவின் ரியாத் நகருக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் சென்னைக்கு வர தாமதமாகும் என தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மத்திய கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல், லெபனான், சிரியா, ஈரான் உள்ளிட்ட பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று பிற்பகல் ஒரு மணி … Read more

இஸ்ரேல் மீது 200 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய ஈரான்; அதிகரிக்கும் போர் பதற்றம்..!

Post Views: 211 நேற்று நள்ளிரவு இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். கிட்டத்தட்ட 200 ஏவுகணைகள் வீசப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாயன்று தெஹ்ரானுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்தார். “ஈரான் இன்றிரவு ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டது, அதற்கு அது பதில் தெரிவிக்கும்” என்று பெஞ்சமின் நெதன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையை இரவு நேர கூட்டத்திற்கு அழைத்த … Read more