இந்திய எல்லையை ஒட்டி உருவாகும் புதிய நாடு..! அரக்கான் ஆர்மியால் பதற்றத்தில் பங்களாதேஷ்!!

Post Views: 522 இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எல்லையில் உருவாகும் அரக்கான் ஆர்மியின் தனி நாடால் வங்க தேசத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கான் ஆர்மி மற்றும் வங்கதேசத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக வங்கதேசத்தின் உள்துறை ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் ஜஹாங்கீர் ஆலம் சௌத்ரி தெரிவித்துள்ளார். மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு மக்களால் அமைக்கப்பட்ட ஆங்சாங் சூகி தலைமையிலான ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனிநாடு … Read more

ஆஸி.,க்கு எதிரான முதல் டெஸ்ட்: வலுவான நிலையில் இந்திய அணி: ஜெய்ஸ்வால் 150 ரன் விளாசல்!

Post Views: 167 பெர்த்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 360 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது. துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்- கவாஸ்கர்’ டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெர்த்தில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 150 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 104 … Read more

அமெரிக்கா: காதல் மனைவி முன் இந்தியர் சுட்டு கொலை

Post Views: 118 அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் வசித்து வந்தவர் கவின் தசார். உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்தவர். மெக்சிகோ நாட்டை சேர்ந்த சிந்தியா என்பவரை காதலித்து கடந்த மாதம் இறுதியில், அவருடன் திருமணம் நடந்தது. வருகிற 29-ந்தேதி மனைவியுடன் கவின் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன், மனைவி சிந்தியா மற்றும் தன்னுடைய சகோதரி தீப்ஷி ஆகியோருடன் வணிக வளாகம் ஒன்றிற்கு பொருட்களை வாங்க சென்றார். இதன்பின் பைக்கில் புதுமண … Read more

சவுதியில் இந்தியருக்கு சவுதி குடியுரிமை வழங்கப்பட்டது..!

Post Views: 278 சவுதியில் உலக அளவில் புகழ்பெற்ற மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர், கண்டுபிடிப்பாளர்கள், நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு சவுதி குடியுரிமை வழங்க இருப்பதாக அரச ஆணை வெளியிடப்பட்டு புகழ்பெற்ற சிலருக்கு குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதன் வரிசையில், இந்திய தொழிலதிபரான ஃபராஸ் காலித்திற்கு சவுதி குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ பட்டப்படிப்பு படித்த காலித், நாம்ஷி நிறுவனத்தை உருவாக்கியவராவார். தற்போது இ-காமர்ஸ் நிறுவனமான நூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கனடாவில் சுட்டுக் கொலை.. 

Post Views: 109 கனடாவின் சர்ரேயில் 28 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்,இது திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.ஜூன் 7 ஆம் தேதி காலை பாதிக்கப்பட்ட யுவராஜ் கோயலின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் யுவராஜ் கோயலின் உடலை மீட்டனர்.இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவராஜ் கோயல் 2019 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் பஞ்சாபின் … Read more

போர்ப்ஸ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியப் பெண்மணி…!

Post Views: 112 லேண்ட்மார்க் நிறுவனத்தின் சிஇஓ ரேணுகா ஜக்தியானி. இந்த நிறுவனத்தை அவரது கணவர் மிக்கி ஜக்தியாணி தொடங்கினார்.2023 மே மாதம் கணவர் இறந்த பிறகு சி.இ.ஓ. பதவிக்கு வந்தார் ரேணுகா. தற்போது இந்த நிறுவனத்தில் தற்போது 50,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் ரேணுகா ஜக்தியானி இடம்பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.மேலும், போர்ப்ஸ் பட்டியலில் இந்தாண்டு இந்தியாவில் … Read more

தாயின் பெயரில் 10 மில்லியன் திர்ஹம்ஸை நன்கொடையாக வழங்கிய துபாய் வாழ் இந்தியர்!!

Post Views: 554 ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், தனிநபர்கள் தங்கள் தாயின் பெயரில் நன்கொடைகளை வழங்க அனுமதிக்கும் ‘Mother’s Endowment’ தொடங்கியுள்ளார். இந்த பிரச்சாரத்தில் திரட்டப்படும் நிதியானது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் கல்விக்கு ஆதரவளிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, இந்த பிரச்சாரம் புனிதமான ரமலான் மாதத்துடன் இணைந்து, பெற்றோர்களை கௌரவப்படுத்துதல், கருணை, இரக்கம் மற்றும் சமூகம் … Read more