கட்சித் தலைவர் பதவி; ராஜினாமா செய்கிறார் கனடா பிரதமர்!

Post Views: 79 ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்றோ அல்லது நாளையோ பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அரங்கில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்னைகளை சந்தித்து வருகிறார். ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி எம்.பி.,க்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர். இவர் மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் … Read more

“இது எங்க நாடு.. ” கனடா மக்களையே கனடாவிலிருந்து வெளியே போக சொன்ன காலிஸ்தான் பிரிவினைவாதிகள்! பதற்றம்!

Post Views: 110 ஒட்டாவா: கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக இயங்கி வரும் நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே இப்போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் ஒரு வினோத சம்பவத்தைச் செய்துள்ளனர். அதாவது கனடா தங்கள் நாடு என்றும் கனடா நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை … Read more

அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் கனடா பிரதமர் ட்ரூடோ தோல்வி அடைவார்: எலான் மஸ்க் கணிப்பு!

Post Views: 94 வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என்று ட்விட்டர் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கு தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரம், அவருக்கு உள்நாட்டிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, கூட்டணி கட்சியினரும் விலகுவதாக … Read more

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

Post Views: 92 ஒட்டாவா: ‘கனடாவில் காலிஸ்தானியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. ‘காலிஸ்தானியர்களுக்கு … Read more

ஒருமணி நேரத்திற்கு 10 பேர்; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இவ்ளோவா?

Post Views: 192 அக்டோபர் 1, 2023 முதல் செப்டம்பர் 30, 2024 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்க அதிகாரிகள் சுமார் 2.9 மில்லியன் சட்டவிரோத குடியேறிகளை கைது செய்தனர்.அவர்களில் அதிகபட்சமாக 43,764 இந்தியர்கள் அமெரிக்க-கனடா எல்லையில் பிடிபட்டனர். அதாவது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக சுமார் 10 இந்தியர்கள் அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய விரும்பும் வழித்தடங்களில் ஒரு பெரிய மாற்றத்தையும் தரவு காட்டியது.கடந்த ஆண்டு 41,770 ஆக இருந்த மெக்சிகோ எல்லையில் கைது … Read more

கனடாவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு- பிரதமர் அதிரடி நடவடிக்கை..!

Post Views: 201 வடஅமெரிக்க நாடான கனடா சர்வதேச அளவில் வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்களை நம்பி தான் இந்நாட்டின் பொருளதார வளர்ச்சி உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் என்ற போர்வையில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதில் இருந்து இருநாட்டு உறவிலும் … Read more

குலுங்கியது கனடா.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்

Post Views: 64 ஒட்டாவா: கனடாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதல் மக்கள் பீதியில் உறைந்தனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. வட அமெரிக்க நாடுகளில் ஒன்று கனடா. இந்த நிலையில் கனடாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கனடாவின் வான்கவுர் தீவில் உள்ள குட்டி நகரமான டோபினோவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரையை … Read more

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கனடாவில் சுட்டுக் கொலை.. 

Post Views: 52 கனடாவின் சர்ரேயில் 28 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்,இது திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட கொலையாக இருக்கலாம் என்று காவல்துறை நம்புகிறது.ஜூன் 7 ஆம் தேதி காலை பாதிக்கப்பட்ட யுவராஜ் கோயலின் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் யுவராஜ் கோயலின் உடலை மீட்டனர்.இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுவராஜ் கோயல் 2019 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் பஞ்சாபின் … Read more

கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவம்: 2 இந்தியர்கள் உட்பட 6 பேர் கைது..

Post Views: 55 கனடாவின் வரலாற்றில் மிகப்பெரிய தங்க கொள்ளை சம்பவம், டொராண்டோவின் முக்கிய விமான நிலையத்தில் கடந்த ஆண்டு நடந்தது.இந்நிலையில், பல மில்லியன் டாலர் தங்கக் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆறு பேரில் குறைந்தது இரண்டு இந்திய வம்சாவளி ஆண்களும் அடங்குவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் மேலும் மூன்று நபர்களுக்கு கனேடிய அதிகாரிகள் வாரண்ட் பிறப்பித்துள்ளனர் என்று பீல் பிராந்திய காவல்துறை(பிஆர்பி) தெரிவித்துள்ளது.ஏப்ரல் 17, 2023அன்று, 22 மில்லியனுக்கும் அதிகமான … Read more

கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை அறிவித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ..!

Post Views: 153 கனடா பள்ளிகளில் உணவுத் திட்டத்தை கொண்டுவர இருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அந்நாட்டின் 2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதன் முன்னோட்டமாக தேசிய பள்ளி உணவுத் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக பிரதமர் அறிவித்திருக்கிறார்.இந்தத் திட்டத்துக்காக 5 ஆண்டுகளுக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும். ஆண்டுதோறும் 4 லட்சம் குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் உணவு வழங்கப்படும் என்றும் கனடா அரசுத் தரப்பில் … Read more

Exit mobile version