குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

(புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா)

ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார்.

சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று குவைத் செய்தி நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இக்கடிதத்தை சவூதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சர் இளவரசர் பைஸ்லால் பின் ஃபர்ஹான் சார்பாக சவூதி அரேபியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் அல்-குரைஜி பெற்றுக்கொண்டார். இந்த சந்திப்பின் போது, இருதரப்பு உறவுகள் மற்றும் அனைத்து களங்களிலும் அவற்றை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்கள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Exit mobile version