2வது முறையாக குலுங்கிய பூமி! ஆப்கானிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்.. தொடரும் அதிர்வால் பீதியில் மக்கள்

Post Views: 92 காபூல்: ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து குலுங்கும் பூமியால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் அதாவது காலையில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏறு்பட்டன. இதில் பல ஆயிரம் கட்டடங்கள் தரைமட்டமாகின. மேலும் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இது மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் … Read more

வட பாகிஸ்தானில் பனிச்சரிவில் சிக்கி 10 பேர் பலி- 15 கால்நடைகள் உயிரிழப்பு

Post Views: 102 .கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் இணைக்கும் ஷௌண்டர் கணவாய் அருகே பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும், பகர்வால்கள் என்று அழைக்கப்படும் உள்ளூர் மக்கள், தங்கள் கால்நடைகளுக்கு பொருத்தமான மேய்ச்சல் நிலங்களைத் தேடி மற்றும் கடுமையான வானிலை நிலைமைகளைத் தவிர்ப்பதற்காகவும் தங்கள் மந்தைகளுடன் இடம்பெயர்கின்றனர். அவ்வாறு இடம்பெயர்ந்து காஷ்மீரில் இருந்து கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்த சுமார் 35 பேர் பள்ளத்தாக்கிற்கு அருகே முகாமிட்டிருந்தனர். இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை … Read more

மனித மூளையில் மைக்ரோசிப்: ஈலோன் மஸ்க் நிறுவன ஆய்வுக்கு அமெரிக்கா அனுமதி.

Post Views: 88 ஈலோன் மஸ்க்கின் நியூராலிங்க் என்ற மூளை சிப் நிறுவனம், மனிதர்களிடம் தனது முதல் சோதனைகளை நடத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (FDA) அனுமதி பெற்றுள்ளதாகக் கூறுகிறது.அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரும் கோடீஸ்வரரான மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம், மூளையில் சிப்களைப் பொருத்தி, அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க உதவ விரும்புகிறது. இந்த சோதனைகளுக்காக உடனடியாக ஆட்களை சேர்க்கும் நடவடிக்கைகளை இன்னும் தொடங்கவில்லை என நியூராலிங்க் தெரிவித்துள்ளது. … Read more

என்னது இவ்வளவு கோடியா?ஏலம் போன திப்பு சுல்தானின் வாள்…!

Post Views: 309 மைசூர் மன்னராக இருந்த திப்பு சுல்தான் பல போர்களில் பயன்படுத்திய வாள் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. அவருக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இந்த வாளை திப்பு பாதுகாத்திருந்தார்.கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட மன்னர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகள் அவர் மன்னராக ஆட்சி புரிந்தார். மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட திப்புசுல்தான் ஏவுகனை தொழில்நுட்பத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார். இப்போதிருக்கும் ஏவுகணை தாக்குதலை திப்புசுல்தான் 18 ஆம் … Read more

கனடா அரசின் செம அறிவிப்பு.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!

Post Views: 679 இந்தியர்கள் கடந்த 5 வருடமாக வெளிநாட்டுக்கு அதிகளவில் படையெடுத்து வருகிறன்றனர், பெரும் பணக்காரர்கள் வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வரும் வேளையில் சாமானிய மக்கள் வேலைவாய்ப்பு, படிப்பு ஆகியவற்றை பயன்படுத்தி வெளிநாட்டில் செட்டிலாகும் முடிவுக்கு வருகின்றனர். ஒருபக்கம் இந்தியாவில் அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாக சந்தை ஆய்வுகள் கூறினாலும், வெளிநாட்டுக்கு படையெடுக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை. இந்த நிலையில் பல இந்தியர்களின் கனவு நாடாக இருக்கும் கனடா நாட்டின் அரசு முக்கியமான விசா மற்றும் … Read more

பைபிள் வைத்திருந்தது குற்றமாம்! தம்பதிக்கு மரண தண்டனை..2 வயது குழந்தைக்கு ஆயுள்.. வடகொரியாவில் ஷாக்!

Post Views: 280 பியோங்யாங்: வடகொரியாவில் மிகவும் வித்தியாசமான சட்டங்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அங்கே இரண்டு வயது சிறுவன் தொடங்கி ஒட்டுமொத்த குடும்பத்தினரும் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் ஸ்ட்ரிக்ட்டான நாடுகளில் ஒன்றாக வடகொரியா இருப்பது அனைவருக்கும் தெரியும். தென்கொரியா வேற லெவலுக்கு முன்னேறி விட்டாலும் கூட வடகொரியா இன்னும் பின்தங்கியே இருக்கிறது. வடகொரியாவில் இருக்கும் சர்வாதிகார ஆட்சியே அதற்கு முக்கிய காரணம். வடகொரியாவின் அதிபராக இப்போது கிம் … Read more

உலகின் துயரமான நாடுகள் பட்டியலில் ஜிம்பாப்வே முதலிடம்: இந்தியா..?

Post Views: 105 நியூயார்க்: 2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இந்தியாவுக்கு 103-ஆவது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல் குறித்து பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே கூறும்போது, “157 நாடுகளில் நிலவும், வேலையின்மை, பணவீக்கம், வங்கிக் கடன், ஜிடிபி ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள்: ஜிம்பாப்வே வெனிசுலா சிரியா லெபனான் சூடான் … Read more

“எமர்ஜென்சி கதவு..” திடீரென நடுவானில் திறந்த பயணி.. அடுத்து நடந்தது என்ன?

Post Views: 153 சியோல்: திடீரென நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவைத் திறந்ததால் உள்ளே இருந்த பயணிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டனர். சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான @@போக்குவரத்து முறையாக விமானங்கள் இருக்கிறது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாகச் சென்று சேர விமானங்களே ஒரே ஆப்ஷனாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விமானத்தில் பயணிப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா ஆண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகளில் இது தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. … Read more

மீண்டும் கொரோனா.. அதே சீனாவில்.! ஒரு மணி நேரத்தில் 3.8 லட்சம் பேரை பாதிக்கும்! கிளம்பிய அடுத்த அலை

Post Views: 111 பெய்ஜிங்: கொரோனா பெருந்தொற்றை நாம் கடுமையாகப் போராடி ஒழித்த நிலையில், சீனாவில் மீண்டும் மற்றொரு புதிய அலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த 2019இல் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் அனைத்து நாடுகளையும் வைத்துச் செய்துவிட்டது. அலை அலையாகத் தாக்கிய கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து நாடுகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் முதலில் ஆய்வகத்தில் தோன்றியதா அல்லது மார்கெட்டில் தோன்றியதா என்பது 4 ஆண்டுகளுக்கு பிறகும் … Read more

கனடாவில் கல்வி கற்க வந்த இடத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளும் மாணவர்கள்

Post Views: 221 கனடாவுக்கு கல்வி கற்க வந்த இந்திய மாணவர்களில், மார்ச் மாதத்தில் மட்டும் எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், அவர்களில் இருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள். இந்த தகவலைக் கொடுத்துள்ளது, ரொரன்றோவிலுள்ள ஒரு இறுதிச்சடங்கு மையம். Lotus என்னும் அந்த இறுதிச்சடங்கு மையம், கனடா முழுவதிலுமிருந்து, உயிரிழந்த இந்தியர்களின் உடல்கள் அல்லது அஸ்தியை இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பணியைச் செய்துவருகிறது. அதிகரிக்கும் எண்ணிக்கை: இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், … Read more