UAE: தீவிர வானிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தல்.

நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்படி மழையுடன் கூடிய காலநிலையில் வாகனங்களை ஓட்டும் போது அவதானத்துடன் செயற்படுமாறு வாகன ஓட்டிகளை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காணப்படும் வேக வரம்புகளை பின்பற்றுமாறும் அபுதாபி பொலிஸார் வாகன ஓட்டிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அப்பகுதியில் மழை பெய்து வருவதைக் குறிக்கும் வகையில் ‘அல் ஐன்’ என்ற ஹேஷ்டேக்கை ஆணையம் பயன்படுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பார்வைத்திறன் குறைவாக இருப்பதால் வாகனம் ஓட்டும் போது கவனச்சிதறல்களை தவிர்க்குமாறும் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

“அதிக காற்று மற்றும் தூசியின் போது குறைவான பார்வை காரணமாக வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் இருக்குமாறு #AbuDhabiPolice கேட்டுக்கொள்கிறது .. மேலும் உங்கள் பாதுகாப்பிற்காகவும், சாலையில் செல்லும் மற்றவர்களின் பாதுகாப்பிற்காகவும், தயவு செய்து வீடியோக்களை எடுத்து அல்லது உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்துவதன் மூலம் கவனத்தை சிதறடிக்க வேண்டாம்” என்று ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times