சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், ஹெட்ஃபோன்களில் கேட்பவர்களுக்கு இது பொருந்தாது.

அருகில் இருப்பவர்கள் தொந்தரவு தருவதாக புகார் அளித்தால் 500 ரியால் அபராதம்
அதுமட்டுமின்றி, குடியிருப்பு பகுதிகளில் இசையின் ஒலியை உயர்த்தும் எவருக்கும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர் புகார் அளித்தால், 500 ரியால் அபராதம் விதித்து சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment