அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலகுகிறார் நிக்கி ஹேலி…

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் சூப்பர் டூஸ்டே வெற்றியைத் தொடர்ந்து, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதர் நிக்கி ஹேலி முடிவு செய்துள்ளார்.

அதிக போட்டிகள் இருந்த போதிலும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டிகளில் அசராமல் கலந்துகொண்ட நிக்கி ஹேலி, புதன்கிழமை தனது வேட்புமனுவை திரும்பப் பெற திட்டமிட்டுள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் தூதரான நிக்கி ஹேலி, காலை 10 மணிக்கு தென் கரோலினாவின் சார்லஸ்டனில் பேச உள்ளார்.அவர் தனது உரையின் போது தேர்தலில் இருந்து விலகுவது குறித்து அறிவிப்பார் என்று வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

குடியரசுக் கட்சியின்  முக்கிய கடைசி வேட்பாளர்  டிரம்ப்

 வரும் நவம்பர் மாதம், அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் டூஸ்டே வாக்கெடுப்பில் ட்ரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடன் இருவரும் ஆதிக்கம் செலுத்தினர்.ட்ரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஹேலி வெர்மான்ட்டில் மட்டும் வெற்றி பெற்றார்.ஆனால், அவரது வெற்றிக்கு மிகவும் அவசியமான வர்ஜீனியா, மாசசூசெட்ஸ் மற்றும் மைனே போன்ற மாநிலங்களில் ஹேலியால் வெற்றி பெற முடியவில்லை.நிக்கி ஹேலி குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினால், 2024 குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான கடைசி முக்கிய வேட்பாளராக டிரம்ப் இருப்பார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times