ஹஜ் செய்துவிட்டு அமீரகம் திரும்பும் ஹாஜிகள் 7 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் -NCEMA

கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு கொரோனா காரணமாக சவூதி அரசாங்கம் இடைக்கால தடை விதித்திருந்தது, இந்நிலை இவ்வாண்டு மீண்டும் வெளிநாட்டினர் ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கு சவூதி அராசங்கம் அனுமதி அளித்ததை தொடந்து இவ்வாண்டு ஹஜ் செய்வதற்காக பலர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சவூதி அரேபியா சென்றுள்ளனர்.

கொரோனவை கட்டுப்படுத்தும் விதமாக, NCEMA:ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு திரும்பும் ஹாஜிகள் முதல் ஏழு நாட்களுக்கு தங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்க்கவும், ஹாஜிகள் வந்து சேர்ந்த நான்காவது நாள் அல்லது ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயமாக கோவிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று NCEMA தெரிவித்துள்ளது.

தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், யாத்திரிகள் நெகடிவ் முடிவைப் பெற்ற பிறகு அல் ஹோஸ்ன் செயலியில் கிரீன் நிறத்தை பெறுவார்கள். யாத்திரிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விமான நிலையங்களில் கோவிட் PCR பரிசோதனையை மேற்கொள்ள வசதி உண்டு. கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் சுகாதார மையத்திற்கு தெரிவிக்கவும், தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்தவும்

மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள
எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Exit mobile version