UAE: Eid விடுமுறையில் ஒரே நேரத்தில் 35-40,000 பேர் குவிந்ததால் ஸ்தம்பித்த ஜபல் ஜெய்ஸ் மலை.

ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா பயணிகள், குடியிருப்பாளர்களும் விடுமுறையை கொண்டாட ஜெபல் ஜெய்ஸின் மலை சிகரத்திற்கு சென்றுள்ளனர். அதன் படி, முதல் இரண்டு நாட்களில் சுமார் 13,000
வாகனங்கள் ஜெபல் ஜெயிஸ்
மலை உச்சத்திற்கு சென்றதாக
கணக்கிடப்பட்டுள்ளது.

ஈத் அல் அதாவின் முதல் இரண்டு நாட்களில் 13,000
வாகனங்களில் 35,000-40,000-க்கும்
மேற்பட்ட பார்வையாளர்கள்
ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு
சென்றதாக கூறப்படுகிறது, மேலும்
மூன்றாம் நாள் மற்றும் இறுதி ஈத் விடுமுறை நாளான நேற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெபல் ஜெய்ஸின் 36 கிமீ நீளமுள்ள சாலையில் அல் புரைரத் மற்றும் வாடி கடாவிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலை சிகரம் வரை போக்குவரத்தை ஒழுங்கமைக்க போலீஸ் ரோந்து வாகனங்கள் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed