டொனால்ட் டிரம்பின் திட்டங்களால் அமெரிக்காவுக்கே ஆபத்தா? ஐ.எம்.எஃப் எச்சரிப்பது ஏன்?!

Post Views: 596 அதிபர் டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் உலகப் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இறுதியில் அமெரிக்காவுக்கே அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரித்துள்ளது. அச்சுறுத்தும் வகையிலுள்ள சுங்க வரிகள், அதிக வர்த்தக சிக்கல்களை ஏற்படுத்தலாம், முதலீடுகளைக் குறைக்கலாம், விலையை அதிகரிக்கலாம், வர்த்தகத்தைக் குழப்பலாம் மற்றும் விநியோக சங்கிலியைச் சீர்குலைக்கலாம் என்று ஐஎம்எஃப் கூறுகிறது. வரி விதிப்புகள், வரிக் குறைப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை அமெரிக்கப் … Read more

‘பொங்கல் வைக்க கூட அரிசி இல்லை’ – இலங்கையில் அரிசித் தட்டுப்பாட்டால் மக்கள் திண்டாட்டம்!

Post Views: 430 இலங்கையில் பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில், அரிசி தட்டுப்பாடு தொடர்வதாக மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் அரிசி தட்டுப்பாட்டை விரைவில் நிவர்த்தி செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். இலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு கடந்த ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருந்தனர். இந்த நிலையில், அரசாங்கம் … Read more

“இது எங்க நாடு.. ” கனடா மக்களையே கனடாவிலிருந்து வெளியே போக சொன்ன காலிஸ்தான் பிரிவினைவாதிகள்! பதற்றம்!

Post Views: 402 ஒட்டாவா: கனடா நாட்டில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சுதந்திரமாக இயங்கி வரும் நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே இப்போது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கனடாவில் ஒரு வினோத சம்பவத்தைச் செய்துள்ளனர். அதாவது கனடா தங்கள் நாடு என்றும் கனடா நாட்டு மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை … Read more

வங்காளதேசத்தில் கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. 20 லட்சம் மக்கள் பாதிப்பு!

Post Views: 156 வங்காளதேசத்தில் கோடைகாலத்தில் பெய்யும் பருவமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக அதிகப்படியான சீரற்ற மழைப்பொழிவு ஏற்படுகிறது. இமயமலை மலைகளில் பனிப்பாறைகள் உருகி வெள்ளம் ஏற்படுகிறது. இந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றங்கரைகளில் வசிக்கும் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து … Read more