சவூதி: பாங்கின் போது மியூசிக் சாதனங்களை பயன்படுத்தினால் 1,000 முதல் 2000 சவுதி ரியால் வரை அபராதம்

சவுதி அரேபியாவில் பாங்கின் போது, பாடல் அல்லது இசையை வாசிப்பவர்கள், மற்றும் மியூசிக் சாதனங்களை இயக்குபவர்களுக்கு 1,000 சவுதி ரியால் அபராதம் விதிகப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மஸ்ஜிதில் இருந்து தொழுகைக்காக அதான்(பாங்கு) அழைக்கப்படும் போது இசை கருவிகளை வாசித்து பிடிபட்டால் அவருக்கு 1,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும். மீண்டும் மீண்டும் விதிகளை மீறினால், அபராதம் 2,000 சவுதி ரியாலாக அதிகரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. تشغيل الموسيقى في أوقات الأذان وإقامة الصلاة غرامته … Read more

ஹஜ் சீசனில் மக்காவில் சமையல் கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்த சவுதி சிவில் பாதுகாப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது

சவுதி அரேபியாவில் உள்ள (Directorate General of Civil Defense)குடிமைத் தற்காப்பு பொது இயக்குநரகம், ஹாஜிகளின் முகாம்கள் மற்றும் மக்காவின் புனிதத் தலங்களில் அமைந்துள்ள அரசுத் துறை அலுவலகங்களிலும் அனைத்து வகையான சமையல் கேஸ் சிலிண்டர்களைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. Saudi Gazette தகவலின்படி, துல்-ஹஜ் மாதத்தின் முதல் நாள்(June 30) காலை முதல் இந்த தடை அமுலுக்கு வரும் என்று சிவில் பாதுகாப்பு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஹஜ்ஜுடைய காலத்தில் மக்காவின் புனிதத் தலங்களில் திரவப் … Read more

குவைத் கல்வி முறையை மேம்படுத்தவும், அதை சர்வதேச அளவில் உயர்த்தவும் தயாராகிறது

பாரிஸ்: குவைத்தில் கல்வி முறையை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பெரிய திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை குவைத் வகுத்து வருகிறது என்று கல்வி அமைச்சர் டாக்டர் அலி அல்-முதாஃப் புதன்கிழமை அன்று தெரிவித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் யுனெஸ்கோ(UNESCO) நடத்திய உருமாற்றக் கல்வி உச்சி மாநாட்டிற்கான (2022) முன் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) மற்றும் குவைத் தொலைக்காட்சிக்கு அமைச்சர் முதாஃப் அளித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது செப்டம்பர் மாதம் … Read more

குவைத்தின் தூதர் சவூதி மன்னருக்கு பட்டத்து இளவரசரிடமிருந்து கடிதம்

(புகைப்படத்தில்: பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா) ரியாத்: சவுதி அரேபியாவுக்கான குவைத் தூதர் ஷேக் அலி அல்-கலீத் அல்-ஜாபர் அல்-சபா, சனிக்கிழமையன்று பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவிடமிருந்து ஒரு கடிதத்தை சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்துக்கு வழங்கினார். சகோதர நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறுதியான மற்றும் நெருங்கிய சகோதர உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் அனைத்து மட்டங்களிலும் அவர்களை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் … Read more

குவைத்தில் உணவு விணடிப்பு சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளன: உணவு வங்கி தகவல்

குவைத்தில் ஒரு நபர் ஆண்டுக்கு 95 கிலோ உணவை வீணடிப்பதாக சமீபத்திய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில், குவைத் குடும்பங்கள் ஒவ்வொரு ஆண்டும் 397,700 டன் உணவை வீணாக்குகின்றன, என 2021 க்கான உணவு கழிவு குறியீட்டு அறிக்கையின்படி ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) மற்றும் கூட்டாளர் அமைப்பான WRAP இதனை வெளியிட்டது. இந்த கழிவுகளில் பெரும்பாலானவை வீடுகளில் இருந்து வருகின்றன, மொத்த உணவில் 11 சதவீதத்தை வீணாக்குகின்றன, அதே நேரத்தில் உணவு சேவை நிறுவனங்கள் மற்றும் … Read more

குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை குவைத் விசிட் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது

வருகின்ற திங்கட்கிழமை முதல் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும். குவைத் ஜூன் 27, 2022 திங்கட்கிழமை முதல் குடும்பம் மற்றும் சுற்றுலா விசாக்கள் உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது. விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளுடன் ஒரு புதிய பொறிமுறையைத் தயாரிப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் … Read more

ஜூலை பெட்ரோல் விலையால் துபாய் மற்றும் ஷார்ஜாவில் டாக்ஸி கட்டணம் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை உயர்வால் துபாய் மெட்ரோ, பேருந்துகள் உள்ளிட்ட பிற பொது போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்வால் துபாயில் டாக்சி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக RTA உறுதி செய்துள்ளது. துபாயில் குறைந்தபட்ச டாக்ஸி கட்டணமான 12 திர்ஹம் மாறாமல் உள்ளது ஆனால் முழுமையான பயணத்தின் அடிப்படையில் மொத்தக் கட்டணம் பாதிக்கப்படும். துபாய்: ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து துபாயில் டாக்சி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சனிக்கிழமை வளைகுடா … Read more

உஷார்.. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் SMS மற்றும் Linkகை கிளிக் செய்ய வேண்டாமென காவல்துறை எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக காவல்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஊரப்பாக்கத்தை சேர்ந்த திரு.சுதாகர் என்பவர் தனது Central Bank of India வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1,52,200/- (ஒரு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து இருநூறு)-ம் மோசடியாக எடுக்கப்பட்டு விட்டதாகவும் அந்த பணத்தை மீட்டு தருமாறு செங்கல்பட்டு மாவட்ட Cyber Crime காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், பின்பு 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக வங்கி கணக்கு முடக்கப்பட்டது.  மேலும் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணாசிங் … Read more

அமீரகத்தில் விசிட் விசாவில் வேலை செய்பவர்கள் கவனத்திற்கு (முழு விபரம்)

பொதுவாக அமீரகத்திற்கு விசிட் விசாவில் சென்று வேலை தேடுவது நம்மவர்களுக்கு வழக்கம் ஆனால் நினைவிருக்கட்டும் அமீரகத்தில் விசிட் விசாவில் சென்று வேலை செய்வது என்பது அமீரக தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகும். நீங்கள் அமீரகத்தில் வேலை செய்ய விரும்பினால், செல்லுபடியாகும் பணி அனுமதிப்பத்திரத்தை (Work Permit) வைத்திருப்பது கட்டாயமாகும். நீங்கள் அமீரகத்திற்குச் சென்று வேலை வாய்ப்பைப் பெற்றிருந்தால், அங்கு உங்களின் புதிய வேலைப் பணியைத் தொடங்குவதற்கு முன், உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்வது அவசியமாகும். … Read more

ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் குறைந்தது 5 பேர் பலியாகியதைத் தொடர்ந்து UAE குடியிருப்பாளர்கள் வலுவான நில நடுக்கங்களைத் இன்று உணர்ந்துள்ளனர்

இன்று சனிக்கிழமை அதிகாலை தெற்கு ஈரானில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர் என்றும், 49 பேர் காயமடைந்தனர் என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, பின்னர் அந்த பகுதி 6.3 ரிக்டர் அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டது. ஈரானின் வளைகுடா கடற்கரையில் உள்ள ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் அவசரகால நிர்வாகத்தின் தலைவர் மெஹ்ர்தாத் ஹசன்சாதே, “பூகம்பத்தில் ஐந்து பேர் இறந்துள்ளனர் … இதுவரை 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று மாநில … Read more