எகிப்து: போர்க்கப்பல்களுடன் இந்திய கடற்படைக் கப்பல் செங்கடல் பகுதியில் பயிற்சி..!
இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ்.கொச்சி எகிப்தின் கடற்படைக் கப்பல்களுடன் செங்கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில் பங்கேற்றது.
எகிப்தின் இஎன்எஸ் அல் ஜூபேர் மற்றும் அபு உபாதா ஆகிய போர்க்கப்பல்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன. கடல் பாதுகாப்பு, பறிமுதல் பயிற்சிகள், தகவல் தொடர்பு, கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பயிற்சியில் இருநாட்டு கப்பல்களும் பங்கேற்றன.
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் பயிற்சிகளின் போது இந்திய கடற்படை உயர் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.
Post Comment