இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்
இலங்ககையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் விமானங்களை இயக்குவதில் சிக்கல்
கடந்த சில காலங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் இல்லாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் வெகுவாக சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளிநாட்டு போக்குவரத்தை பாதிக்கும்விதமாக எரிபொருள் தட்டுப்பாட்டினால் இலங்கையில் இருக்கும் விமானங்களை இயக்குவதில் சிக்கல் என்ற தகவல் மக்களை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டுமே முன்னுரிமை என்ற அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் 90 சதவீத தனியார் பேருந்து சேவைகள் ஏற்கணமே பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், உள்ளூர் பேருந்து மற்றும் ரயில் சேவையை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமான எரிபொருளுக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்ற பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.
1 comment