போர், இயற்கை பேரிடரால் உலகில் 7 கோடி பேர் இடம்பெயர்வு.
போர் மற்றும் இயற்கைப் பேரிடர்கள் காரணமாக உலகில் பல நாடுகளில் ரூ.7 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர்.
போர் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் கடந்த ஆண்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளேயே இடம்பெயரவேண்டுய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கையை மிகவும் உயர்ந்துள்ளது.

2022-ஆம் ஆண்டில் இதற்கு முன்பு இல்லாத வகையில் 7.11 கோடி மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இது 2021-ஆம் ஆண்டை விட 20 சதவீதம் அதிகம்.
உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையம் (IDMC) மற்றும் நோர்வே அகதிகள் கவுன்சில் (NRC) இணைந்து வெளியிட்ட கூட்டு அறிக்கையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான அதிகரிப்பு, நிச்சயமாக, உக்ரைனில் நடக்கும் ரஷ்யாவின் போராலும், பாக்கிஸ்தானில் ஏற்பட்ட மழை வெள்ளத்தாலும், உலகம் முழுவதும் புதிய மற்றும் நடந்து கொண்டிருக்கும் மோதல்கள் மற்றும் பல திடீர் மற்றும் மெதுவாகத் தொடங்கும் பேரழிவுகளாலும் ஏற்பட்டுள்ளது.
Post Comment