பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

போர்ட் மோர்ஸ்பை, பப்புவா நியூ கினியாவின் நியூ அயர்லாந்து பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.58 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 51 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாகவும், அருகிலுள்ள நகரமான கோகோபோவில் இருந்து சுமார் 123.2 கி.மீ. தொலைவில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Previous post

பாகிஸ்தான்: வீரர்களை கொல்ல காரில் வைத்த வெடிகுண்டு வெடித்து பயங்கரவாதிகள் பலி!

Next post

“இது எங்க நாடு.. ” கனடா மக்களையே கனடாவிலிருந்து வெளியே போக சொன்ன காலிஸ்தான் பிரிவினைவாதிகள்! பதற்றம்!

You May Have Missed