கசிந்த விஷ வாயு; அப்படியே தரையில் விழுந்து உயிரை விட்ட மக்கள் – பயங்கரம்!

விஷ வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷ வாயு கசிவு

தென் ஆப்பிரிக்கா, போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. அங்கு சுரங்க வேலைகளில் உள்ளவர்களுக்கான தற்காலில குடியிருப்புகளும் அமைந்துள்ளது.

இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 10க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

16 பேர் பலி:

மேலும், உரிமம் பெறாத சுரங்கத் தொழிலாளர்கள், தங்கத்தை சுத்திகரிக்க பயன்படுத்தியபோது அபாயகரமான நைட்ரேட் வாயு கசிவு ஏற்பட்டதில் மூன்று குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போலீஸார் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில், 4 பேர் மோசமான நிலையிலும், 11 பேர் தீவிர சிகிச்சையிலும் உள்ளனர். உயிரிழந்தவர்களில் 5 பேர் பெண்கள், 3 குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Post Comment

You May Have Missed