குவைத்: மறு அறிவிப்பு வரும் வரை குவைத் விசிட் விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது
வருகின்ற திங்கட்கிழமை முதல் மீண்டும் மறு அறிவிப்பு வரும் வரை இது அமலில் இருக்கும்.
குவைத் ஜூன் 27, 2022 திங்கட்கிழமை முதல் குடும்பம் மற்றும் சுற்றுலா விசாக்கள் உள்ளிட்ட விசிட் விசா வழங்குவதை நிறுத்தியுள்ளதாக குவைத் செய்தி நிறுவனம் (KUNA) தெரிவித்துள்ளது.
விசா நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளுடன் ஒரு புதிய பொறிமுறையைத் தயாரிப்பதை இந்த நடவடிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையானது முதல் துணைப் பிரதமரும் உள்துறை அமைச்சருமான ஷேக் அஹ்மத் நவாஃப் அல் அஹ்மத் அல் சபாவின் அறிவுறுத்தலின் பேரில் எடுக்கப்பட்ட முடிவு, விசா வழங்கும் செயல்முறையை ஒழுங்கமைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒழுங்குமுறைகளுடன் கூடிய புதிய பொறிமுறையைத் தயாரிக்க வதிவிட விவகாரத் துறையை அனுமதிக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp Group (https://chat.whatsapp.com/I6457ahW6fjL43R1cZkLuH) யில் இணைத்து கொள்ளுங்கள்.
Post Comment