3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பலில் தீ: இந்தியர் ஒருவர் உயிரிழப்பு, 20 பேர் காயம்

Post Views: 115 லண்டன்: நெதர்லாந்து கடற்பகுதியில் 3 ஆயிரம் கார்களுடன் சென்ற சரக்கு கப்பல் தீப்பற்றியதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். ஜெர்மனியில் இருந்து சுமார் 3,000 கார்களுடன் ‘ஃப்ரீமேன்டில் ஹைவே’ என்ற சரக்கு கப்பல் எகிப்து நோக்கி புறப்பட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது கப்பலில் அடுக்கப்பட்டிருந்த 25 எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீப்பற்றியது. தீ மளமளவென மற்ற கார்களுக்கும் … Read more

வலிமைவாய்ந்த டொக்சூரி சூறாவளி – எதிர்கொள்ளத் தயாராகும் சீனா

Post Views: 160 சீனாவின் பெருநிலப் பகுதி டொக்சூரி (Doksuri) சூறாவளியை எதிர்கொள்ளத் தயாராகிறது.அதனை மாபெரும் சூறாவளி என்று சீனா கூறுகிறது. நாளை (28 ஜூலை) சூறாவளி வீசும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதனால் பெயச்சிங் எச்சரிக்கை நிலையை உயர்த்தியுள்ளது. நாளை குவாங்டொங்கிற்கும் (Guangdong) பூஜியானுக்கும் (Fujian) இடையில் அது கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களில் அந்த வட்டாரத்தை உலுக்கும் 2ஆவது சூறாவளி அது. வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்படக்கூடும் என்று சீன அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். … Read more

சிங்கப்பூரில் மொத்த வேலைவாய்ப்பு விகிதம் விரிவடைகிறது; வேலையின்மை விகிதம் குறைகிறது

Post Views: 89 சிங்கப்பூரில் தொடர்ந்து 7ஆவது காலாண்டாக மொத்த வேலை வாய்ப்புகளின் விகிதம் உயர்ந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதவள அமைச்சு வெளியிட்ட முன்னோடி மதிப்பீட்டு அறிக்கையின்படி, ஊழியர் பற்றாக்குறை தணியும் அறிகுறிகள் தெரிகின்றன. வேலையின்மை விகிதம் குறைவாக அதாவது 1.9 விழுக்காட்டில் இருக்கிறது.குடியிருப்பாளர்களிடையே வேலை விகிதம் கோவிட் நிலவரத்துக்கு முன்பிருந்த நிலையில் உள்ளது. முன்னோக்கிப் பார்க்கையில்,நிறுவனங்கள் கவனமான போக்கைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது.வேலைக்கு ஆள் எடுப்பதற்கு அல்லது சம்பளத்தை உயர்த்துவதற்குக் குறைவான நிறுவனங்களே முன்வருகின்றன. இரண்டாம் காலாண்டில் ஆட்குறைப்பு … Read more

கூட்டமா அது என்ன கருப்பா இருக்கு! திடீரென கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்.. மக்கள் செய்த மாஸ் செயல்

Post Views: 106 கேன்பெர்ரா: மேற்கு ஆஸ்திரேலியாவில் அல்பானிக்கு கிழக்கே செயின்ஸ் கடற்கரையில் அதிக அளவில் ‘பைலட் திமிங்கலங்கள்’ கரை ஒதுங்கியிருக்கிறது. இதனை மீண்டும் கடலுக்கு திருப்பி விடும் பணியில் வனவிலங்கு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் கடந்த திங்கட்கிழமை இந்த திமிங்கலங்கள் கரை ஒதுங்கியதை பார்த்தோம். நாங்கள் பார்க்கும் போது 20 வரைதான் இருந்தது. ஆனால் நேரம் போக போக இந்த எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது 70 திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. … Read more

ஊதியத்துடன் விவாகரத்து விடுப்பு..!ஊழியர்களுக்கு சலுகையை வாரி வழங்கும் பெரு நிறுவனங்கள்

Post Views: 55 ஊழியர்களின் விவாகரத்து காலங்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் முறையை சில நிறுவனங்கள் அமுல்படுத்த தொடங்கியுள்ளனர். விவாகரத்து விடுப்பு பொதுவாக திருமண விடுப்பு, பேறுகால விடுப்பு போன்ற விடுமுறைகளை நாம் கேள்விப்பட்டு இருப்போம், ஆனால் சமீபத்தில் தங்கள் ஊழியர்களின் விவாகரத்து காலங்களில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை சில நிறுவனங்கள் வழங்க தொடங்கியுள்ளன. பொதுவாகவே ஊழியர்கள் தங்களது விவாகரத்து காலங்களில் மிகுந்த மன அழுத்தங்கள் மற்றும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர், இத்தகைய காலங்களில் அவர்களால் வேலையில் முழு … Read more

திடீரென பயங்கரமாக வெடித்த சாலை… மயிரிழையில் உயிர் தப்பிய நபர்: கமெராவில் சிக்கிய காட்சி

Post Views: 57 தென்னாப்பிரிக்க நகரம் ஒன்றில், திடீரென சாலை ஒன்று வெடித்துச் சிதறியதில், ஒருவர் பலியானார், 48 பேர் காயமடைந்தனர். மயிரிழையில் உயிர் தப்பிய நபர் தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் திடீரென சாலை ஒன்று பயங்கரமாக வெடித்தது. சாலை வெடித்ததில் சாலையில் வரிசையாக நின்ற வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. அப்போது மினி பஸ் ஒன்று தூக்கி வீசப்பட, சரியாக அதனருகே நின்றுகொண்டிருந்த ஒருவர் சட்டென விலகியதால், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த காட்சி, அங்கு … Read more

மெகா பிரச்சினை..” திணறும் ஜப்பான்.. சாதித்து காட்டிய குட்டி கம்பெனி!

Post Views: 56 டோக்கியோ: சரியும் மக்கள்தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் முடியாமல் திணறி வரும் நிலையில், அங்குள்ள தனியார் நிறுவனம் இதற்கு மாஸான தீர்வை கண்டுபிடித்துள்ளது. உலகளவில் இப்போது மூன்றாவது மிகப் பெரிய நாடாக இருப்பது ஜப்பான்.. ஜிடிபி அடிப்படையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இடத்தில் இருக்கிறது.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஒரு பிரச்சினை நிலவி வந்தது. இது அவர்களின் எதிர்காலத்தையே மிகப் பெரிய ஆபத்தில் தள்ளும் வகையில் … Read more

பைபிள், தவ்ராவை எரிக்க அனுமதி.. கடைசியில் முஸ்லிம் இளைஞர் கொடுத்த டுவிஸ்ட் – உலகமே நெகிழ்ந்திருச்சு

Post Views: 70 ஸ்டாக்ஹோம்: சுவீடனில் பக்ரீத் பண்டிகை அன்று நீதிமன்ற அனுமதியுடன் குர்ஆன் எரிக்கப்பட்டதைபோல் கிறிஸ்துவர்களின் புனித நூலான பைபிள் மற்றும் யூதர்களின் புனித வேதமான தவ்ராவை எரிக்க அனுமதி பெற்ற முஸ்லிம் இளைஞர் இறுதியில் செய்த காரியம் அனைவரையும் நெகிழ வைத்து உள்ளது. கடந்த ஜூன் 28 ஆம் தேதி ஐரோப்பிய நாடான சுவீடனில் இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர். அப்போது மசூதி முன் வந்த நபர் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை … Read more

நடுவானில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட விமானி: பெண் பயணி எடுத்த துணிச்சலான முடிவு

Post Views: 60 அமெரிக்காவில், வானில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்க, பெண் பயணி ஒருவர் துணிச்சலாக விமானத்தைத் தரையிறக்கினார். திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட விமானி சனிக்கிழமையன்று, ஆறு பேர் பயணிக்கும் விமானம் ஒன்று நியூயார்க்கிலிருந்து புறப்பட்ட நிலையில், விமானிக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. Connecticutஐச் சேர்ந்த பெண் பயணி ஒருவர் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்துள்ளார். விமானியின் உடல் நலம் திடீரென பாதிக்கவே, துணிச்சலாக அந்த பெண் பயணி … Read more

மனவலிமை கொண்டவர்களிடம் பொதுவாக காணப்படும் 5 முக்கிய பழக்கங்கள்.!

Post Views: 57 மனவலிமை அல்லது மனஉறுதி என்பது எல்லோருக்கும் இயல்பாகவே வந்து விடாது. தொடர் பயிற்சிகள் மூலம் நாம் வளர்த்து கொள்ள வேண்டிய திறமை ஆகும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி எண்ணற்ற சவால்களை சமாளித்து சாதித்தவர்களிடம் இருக்கும் முக்கிய ஒற்றுமை மனஉறுதி. மன உறுதியின் முக்கியத்துவத்தை எப்போதும் குறைத்து மதிப்பிட முடியாது மனவலிமை அல்லது மனஉறுதி என்பது எல்லோருக்கும் இயல்பாகவே வந்து விடாது. தொடர் பயிற்சிகள் மூலம் நாம் … Read more