பயணத்தை ரத்து செய்தால் 4000 ரியால் அபராதம்!

Post Views: 205 சவுதிஅரேபியாவில் செயல்படும் ஸ்மார்ட் டாக்ஸிகளின் ஓட்டுனர்கள், ஒப்புக்கொண்ட பயணங்களை ரத்து செய்தால் அவர்களுக்கு 4000 ரியால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் டாக்ஸி ஓட்டுநர்கள் பொது போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியை பெற்றிருந்தால், அவர்கள் சவுதியின் மற்ற நகரங்களிலும் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரழிவின் தொடக்கம்? புரட்டிப் போட்ட வெள்ளம்.. லிபியாவில் 2000 பேர் பலி! பல ஆயிரம் பேர் மாயம்

Post Views: 170 திரிபோலி: லிபியா நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளத்தில் 2000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல ஆயிரம் பேர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. வடக்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடு லிபியா. ஆப்பிரிக்காவில் நிலப்பரப்பின் அடிப்படையில் 4ஆவது மிகப் பெரிய நாடாக இருந்தாலும் கூட.. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை ரொம்பவே குறைவு.. அங்கே வெறும் 67.4 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். இதற்கிடையே இந்த லிபியாவில் … Read more

டோலி’ குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழிநடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி காலமானார்!

Post Views: 132 எடின்பர்க்: கடந்த 1996-ல் குளோனிங் முறையில் டோலி எனும் ஆடு உருவாக்கப்பட்டது. இந்த பணியில் ஈடுபட்ட குழுவை வழிநடத்திய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார். அவருக்கு வயது 79. அவர் உயிரிழந்த தகவலை ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் உலகுக்கு அறிவித்த போது அது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் இந்த ஆடு ‘6LL3’ என அறியப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க பாடகர் டோலி பார்ட்டனின் … Read more

இந்தோனேசியாவின் கோல்டன் விசாவை பெறும் முதல் நபர் யார் தெரியுமா?

Post Views: 146 ஐக்கிய அரபு அமீரகத்தை போல இந்தோனேசியாவும் கோல்டன் விசாக்களை வழங்க தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில உலக நாடுகள், வெளிநாட்டை சேர்ந்த முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள், திறமையாளர்களுக்கு கோல்டன் விசாக்களை வழங்கி வருகிறது. கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை கோல்டன் விசாக்கள் செல்லுபடியாகும். கோல்டன் விசா வைத்திருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட சொந்த … Read more

ஜி-20 உச்சி மாநாடு | சர்வதேச ஊடகங்கள் புகழாரம்

Post Views: 283 ஜி-20 உச்சி மாநாடு தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் ராஜதந்திர செயல்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாராட்டி செய்தி, கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. “பொதுவாக சர்வதேச மாநாடுகளில் அமெரிக்க அதிபரே ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். ஆனால் ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைவிட இந்திய பிரதமர் மோடியே ஆதிக்கம் செலுத்தினார். உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் வெற்றி பெற்றுள்ளன. ரஷ்யாவை … Read more

சவூதி அரேபியாவில் தேசிய தினத்தை ஒட்டி பொதுவிடுமுறை!

Post Views: 172 சவுதி அரேபியாவின் 93ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு செப்டம்பர் 23 சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சம் தெரிவித்துள்ளது.தொழிலாளர் சட்டத்தின் பிரிவு 24இன் படி இந்த விடுமுறையை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. “We dream We Achieve” என்ற முழக்கத்தோடு இந்த ஆண்டின் தேசிய தினம் கொண்டாடப்படுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரி பாட்டர் புத்தகத்தின் திருத்தப்படாத பிரதி ரூ.15 லட்சத்துக்கு ஏலம்!

Post Views: 102 லண்டன்: உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் முதல் பாகத்தின் திருத்தப்படாத பிரதி இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.15 லட்சத்துக்கு மேல் ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. 1997ஆம் ஆண்டு ஜே.கே.ரவுலிங் எழுதிய ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ஃபிளாசஃபர்ஸ் ஸ்டோன்’ புத்தகம் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை எழுதினார் ரவுலிங். இதனையடுத்து ஹாரி பாட்டர் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. … Read more

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் தரைமட்டம் – மொராக்கோவில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Post Views: 104 காசாபிளாங்கா: மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலநடுக்கத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மரண ஓலங்கள் கேட்டுக் கொண்டே இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மொராக்கோ நாட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.11 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8புள்ளி என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், பல்வேறு கட்டிடங்களில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்துக்கு இதுவரை 1037 பேர் உயிரிழந்துள்ளதாகத் … Read more

140 ஆண்டுகளில் இல்லாத கனமழை: ஹாங்காங் சாலைகளில் கரைபுரளும் வெள்ளம்…

Post Views: 1,369 ஹாங்காங்: ஹாங்காங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துவருவதால் அங்குள்ள சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஹாங்காங் நகரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (செப் 08) வரலாறு காணாத கனமழை பெய்தது. கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த மழை 158.1 மில்லிமீட்டர் அளவில் பதிவானதாக ஹாங்காங் வானிலை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. 1884ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த அளவு மழை பதிவாகியிருப்பது இதுவே முதல் முறை. இந்த் கனமழையால் … Read more

மொராக்கோ பூகம்பம்: 600-ஐ கடந்த உயிரிழப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

Post Views: 175 ரபாட்: வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்காவில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பூகம்பத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு அரசுத் தரப்பும் உறுதி செய்துள்ளது. மொராக்கோவின் சுற்றுலா தலமான மாரகேஷ் பகுதியில் இருந்து 72 கிலோ மீட்டர் தொலைவில் தென்மேற்கில் உள்ள இடத்தில் பூமிக்கு அடியில் 18.5 … Read more