இந்தியா 241 ரன்களை ஆஸ்திரேலியாவுக்கு இலக்காக வைத்துள்ளது. வெற்றி பெறுமா இந்தியா?

இன்று ஐசிசி உலக கோப்பை அகமதாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அரை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துடன் விளையாடி வெற்றி பெற்றது.அதேபோல ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவுடன் விளையாடி அரை இறுதி போட்டியில் வெற்றி பெற்றது. இன்று இரு அணியினருக்கும் இறுதிப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த அரை இறுதிப் போட்டியில் விராட் கோலி சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் இன்று இறுதிப் போட்டியில் அவர் அரை சதத்துடன் வெளியேறினார்.

கடந்த அரை இறுதிப் போட்டியில் இந்தியா 397 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.ஆனால் தற்போது 240 ரன்கள் மட்டுமே பெற்று ஆஸ்திரேலியாவுக்கு 241 ரன்களை இலக்காக வைத்துள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுமா என்ற பெரும் ஆவலுடன் அனைத்து ரசிகர்களும் மேலும் பெரும்புள்ளிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times