16.1 C
Munich
Saturday, July 27, 2024

உலகில் 4.4 மில்லியன் மக்கள் நாடற்றவர்கள்: ஐ.நா அறிக்கை

Must read

Last Updated on: 5th November 2023, 07:57 pm

உலகில் 4.4 மில்லியன் மக்கள் நாடற்றவர்கள் என்று அகதிகளுக்கான ஐ.நா தெரிவித்திட்டுள்ளது.95 நாடுகளில் 4.4 மில்லியன் அகதிகள் குடியுரிமையற்றவர்களாக உள்ளனர். ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் #IBelong பிரச்சாரத்தின் ஒன்பதாவது ஆண்டு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய புள்ளிவிபரங்களில் சேர்க்கப்படாத நாடற்றவர்களின் ஒப்பீட்டு எண்ணிக்கையை சேர்க்கும்போது உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகளவில் கட்டாய இடப்பெயர்வு அதிகரித்து வருவதால், மில்லியன் கணக்கான மக்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர் மற்றும் சமூகத்தில் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு உட்பட அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகிறார்கள்” என்று அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறினார்.

நாடற்றவர்களில் பெரும்பாலானோர் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்கள்.ஏஜென்சி அறிக்கையின்படி, எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லாதவர்கள் பெரும்பாலும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சேவைகளை இழக்கின்றனர். இது அவர்களை அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஒதுக்கி வைப்பதுடன், பாகுபாடு, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடுகிறது.

- Advertisement -spot_img

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

Latest article