காலை எழுந்திருக்கும்போதே சோர்வா இருக்க இந்த 4 பழக்கம்தான் காரணம்!

நீங்கள் விழித்த பிறகு 10 – 15 நிமிடங்கள் துவங்கி சில பேருக்கு ஒரு மணி நேரம் வரை தூக்க சோர்வு நீடிக்கலாம். ஆனால், இது தொடர்ந்து உங்களின் அன்றாட வேலைகளை பாதிக்கும் வண்ணம் மாறுவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளது. அதை நீங்கள் கண்டறிந்து சரி செய்யாவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

சரியான தூக்கமின்மை, ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விழிப்பது, தூக்க சுழற்சி மாறி கொண்டிருப்பது, ஒரு சில தூக்கம் சார்ந்த டிஸார்டர்களே விழித்த பிறகான சோர்வுக்கு காரணமாகின்றன.

நீலக்கதிர்களின் தாக்கம்

இந்த நீலக்கதிர்கள் பெரும்பாலும் நாம் பயன்படுத்தும் மொபைல்போன்கள் , லேப்டாப்கள் போன்றவற்றின் திரையிலிருந்துதான் அதிகமாக நம்மை தாக்குகிறது. இது உங்களின் தூக்கம் மற்றும் விழிப்பு சுழற்சியை கட்டுப்படுத்தும் மெலடோனின் எனும் ஹார்மோனை பாதித்து உங்களது தூக்க சுழற்சியை கெடுக்கிறது. இதன் விளைவாக நீங்கள் எழுந்துகொள்ளும்போது உடல் சோர்வை உணருகின்றீர்கள்.

​உணவுகள்

ஒரு நாளில் அதிகமாக காபி , சாக்லேட் உட்பட காபின் அதிகமாக உள்ள பொருட்களை உண்பது அல்லது தூங்க போவதற்கு முன்பு இவற்றை எடுத்துக் கொள்வது உங்களது தூக்கத்தை கெடுக்கும். காபினில் உள்ள கூறுகள் உங்கள் மூளையை விழிப்போடு வைத்திருந்து நீண்ட நேரத்திற்கு உங்களை தூங்க விடாமல் செய்யும். அதே போல், நள்ளிரவில் அதிக முறை உங்களை விழிக்க செய்யும்.

மேலும், காலை விழிப்பின்போதும் சோர்வாக உணர வைக்கிறது. மேலும், இரவு தூங்கும்போதும் அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுகிறது. அது மட்டுமின்றி உறங்க செல்வதற்கு முன்பு எதையாவது அதிகமாக குடிக்கும்போது அது நள்ளிரவில் அடிக்கடி உங்களை எழுப்பி சிறுநீர் கழிக்க செய்கிறது. இதன் விளைவு உங்கள் தூக்க சுழற்சி கேட்டு போகிறது. இது உங்களை காலையில் சோர்வாக வைத்துக் கொள்கிறது.

​தூங்கும் இடம்

நீங்கள் தூங்கும் இடத்திற்கும் உங்கள் தூக்கத்தில் முக்கிய பங்குண்டு. உங்களின் படுக்கை சரியாக இல்லை என்றால் காலையில் சோர்வு மட்டுமல்ல வலியும் ஏற்படும். எனவே, நல்ல சுத்தமான மற்றும் உங்களுக்கு ஏற்ற அளவிலான படுக்கையை தேர்ந்தெடுத்து நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

சத்தம் குறைந்த அல்லது சத்தமே இல்லாத இடத்தில் உறங்குவது முக்கியம். சத்தமான இடத்தில் நீங்கள் தூங்கும் போது அது உங்கள் காதுகள் வழியாக மூளையை வம்புக்கு இழுத்து உங்கள் தூக்கத்தை கெடுக்கிறது. சில நேரங்களில் அடிக்கடி விழித்துக் கொள்ளவும் காரணமாகிறது.

மிக சூடான இடம் அல்லது மிக குளிரான இடம் என எதிலும் உறங்க கூடாது. மிதமான வெப்பநிலை உள்ள இடத்தில் நிம்மதியான உறக்கம் வரலாம். அதை விட சரியான குளிரூட்டப்பட்ட அறையில் உறங்குவது உங்களுக்கு ஆழ்ந்த மற்றும் நிம்மதியான உறக்கத்தை தரலாம். இது காலையில் விழிக்கும் போது உங்களை எனெர்ஜியோடு எழுப்பலாம்.

தூக்க நோய்கள்

பலருக்கும் தூக்க நோய்கள் தங்களுக்கு இருப்பது கூட தெரிவதில்லை. நீங்கள் குறட்டை விடுவது கூட ஒரு வகையான தூக்க டிஸார்டரின் அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக இன்சோம்னியா , தூக்கத்தில் நாடாகும் வியாதி, தூங்கும்போது இடை இடையில் நமக்கே தெரியாமல் சுவாசம் தடைபடுவது போன்ற டிஸார்டர்கள் கூட நீங்கள் காலையில் எழுந்துக் கொள்ளும்போது ஏற்படும் சோர்வுக்கு காரணமாக இருக்கலாம்.

மேற்கண்ட உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றியும் காலை சோர்வு தொடர்கிறது என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகி பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times