பயணிகளுக்கு லக்கேஜ் 35 கிலோ மற்றும் ஹேன்ட் லக்கேஜ் 8 கிலோ வரை அனுமதி.
ஏர் இந்தியா அனைத்து GCC நிலையங்களிலிருந்தும் இந்தியாவிற்குப் பயணிக்கும் பயணிகளுக்காக சிறப்பு சுதந்திர தினச் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து டெல்லி, மும்பை மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களுக்கு பயணிகளுக்கு 330 திர்ஹம் வரை விமான டிக்கெட்டுகள் குறைவாக இருக்கும் என அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8 மற்றும் 21, 2022 முதல் பயணிகள் இந்தச் சலுகையைப் பெறலாம்.
ஒன் இந்தியா ஒன் ஃபேர்” என்ற முன்முயற்சியின் கீழ், அனைத்து வளைகுடா நிலையங்களிலிருந்தும் (ஓமன் தவிர) இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் செல்லும் அனைத்து நேரடி விமானங்களிலும் கவர்ச்சிகரமான சிறப்பு கட்டணத்தை விமான நிறுவனம் வழங்குகி இருக்கிறது.
அக்டோபர் 15, 2022 வரையிலான பயணத்திற்கான விளம்பர காலத்தில் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளிலும் பயணிகளுக்கு 8 கிலோ ஹேன்ட் லக்கேஜ் மற்றும் செக் இன் பேக்கேஜ் அலவன்ஸ் 35 கிலோ அனுமதிக்கப்படுகிறது.
ஏர் இந்தியா பிராந்திய மேலாளர் பிபி சிங் கூறுகையில், “வளைகுடாவில் இயக்கப்படும் விமானங்களின் அடிப்படையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 50 சதவீதத்தையும், வளைகுடாவில் இருந்து வழங்கப்படும் இருக்கைகளின் அடிப்படையில் 56 சதவீதத்தையும் வழங்குகிறது.
“ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ உட்பட, வளைகுடா செயல்பாடுகள் வாரத்திற்கு 81,000 இருக்கைகள் ஆகும்.”
இத்திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரையறுக்கப்பட்ட இருக்கைகள், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும் என கூறினார்.

ஒவ்வொரு நிலையத்திலிருந்தும் ஏர் இந்தியாவின் நேரடி விமானங்களில் ஒரு வழி அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புக் கட்டணங்கள் பொருந்தும்.
விற்பனை செல்லுபடியாகும் காலம்: ஆகஸ்ட் 8 மற்றும் 21, 2022
பயண காலம் செல்லுபடியாகும் காலம்: அக்டோபர் 15, 2022 வரை.
குறிப்பு: நாணய ஏற்ற இறக்கங்கள் காரணமாக கட்டணங்கள் மாறுபடலாம்.
மேலும் பல முக்கிய தகவலுக்கு எங்கள் WhatsApp குரூப்பில் (https://bit.ly/3SWGrZk) இணைத்து கொள்ளுங்கள்.
🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)
⏳ Generating tags using Gemini API, please wait...