மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற முதல் நபர் பலி..!

அமெரிக்கா: இரண்டு மாதங்களுக்கு முன், மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெற்ற ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன் என்ற அமெரிக்கர் உயிரிழந்துள்ளார்.அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் வசித்து வந்த 62 வயதான ரிச்சர்ட் “ரிக்” ஸ்லேமேன், மார்ச் மாதம் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் புதிய அறுவை சிகிச்சையை செய்து கொண்டார்.இந்நிலையில், அவர் திடீரென்று மரணம் அடைந்திருப்பது ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை குழு ஸ்லேமனின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்ததுடன், அவரது மரணம் மாற்று அறுவை சிகிச்சையுடன் தொடர்புடையது என்று கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

உலகம் பன்றியின் இதயத்தை பெற்ற இருவர் பலி மேலும், அந்த மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை குழு அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளது.ஸ்லேமனுக்கு முன், பன்றி சிறுநீரகங்கள் மூளை சாவு அடைந்த உறுப்பு நன்கொடையாளர்களுக்கு மட்டுமே இடமாற்றம் செய்யப்பட்டன.

எனவே, பன்றியின் சிறுநீரகத்தை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெட்ரா முதல் உயிருள்ள நபர் ஸ்லேமேன் ஆவார்.இதற்கு முன்பு இரண்டு நபர்களுக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தை பொருத்தும் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் இருவரும் சில மாதங்களுக்குள் இறந்துவிட்டனர்.அறுவைசிகிச்சை நிபுணர்கள் பன்றியின் சிறுநீரகம் குறைந்தது இரண்டு வருடங்கள் செயல்படும் என்று எதிர்பார்த்தனர்.ஆனால், ஸ்லேமேன் தற்போது இறந்துள்ளார்.

🎯 YouTube Tag Generator (Powered by Google Gemini)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times