அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – 5 பேர் உயிரிழப்பு, நூற்றுக்கணக்கான விபத்துகள்!

அமெரிக்கா எதிர்கொண்டுள்ள மோசமான பனிப்புயல் மற்றும் பனிப்பொழிவின் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, மக்கள் பயணம் செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் மற்றும் பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.

ஏழு அமெரிக்க மாகாணங்கள் அவசரநிலைகளை அறிவித்தன. அவை மேரிலாந்து, விர்ஜீனியா, மேற்கு விர்ஜீனியா, கான்சஸ், மிசோரி, கென்டக்கி மற்றும் ஆர்கன்சா ஆகும்

வட துருவத்தைச் சுற்றி வரும் குளிர்ந்த காற்றின் துருவச் சுழல் (Polar Vertex) காரணமாக இந்த தீவிர வானிலை மாற்றம் ஏற்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2,300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 9,000 விமானங்கள் தாமதமாகியுள்ளன.

Poweroutage.us எனும் இணையதளத்தின்படி, பனிப்புயலின் பாதையில் உள்ள மாகாணங்களில் வாழும் கிட்டதட்ட 190,000 மக்களுக்கு, செவ்வாய்கிழமை காலை மின்சார சேவை துண்டிக்கப்பட்டது.

தேசிய வானிலை சேவை (NWS) தகவலின்படி, செவ்வாய்க்கிழமையும் அமெரிக்காவின் பெரும்பாலான வடகிழக்கு பகுதிகளில் பனிப்பொழிவு தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Prayer Times